Monday, April 26, 2010

மௌனம்

இதில்தான் நீ தொடங்கினாய்!
இன்று வரை புரியவில்லை..
மௌனம் என்பது
பேசாமல் இருப்பதா,
பேசத் தவிப்பதா,
இல்லை
பேச்சடைத்து நிற்பதா?

Sunday, April 25, 2010

தாவணிப் பூ சிறகுகள்

நிலவு, பூ,
மேகம்,
என
எதைப் பற்றியும்
பேசும் கவிதைகள்
எதுவும் எனக்குச்
சொன்னதில்லை,
உன் தாவணிச் சிறகின்
தீண்டல்
இப்படி இருக்குமென...