Friday, April 22, 2011

தனிமை

நீ
எறிந்து போன
தனிமையில்
அத்தனையும்
சிதறிப் போனது..
என்னிடமிருந்த
உன்னைத் தவிர...

Wednesday, April 20, 2011

கைம்மை


நீ பிரிந்ததும்
நிலவைத் தொலைத்து
விதவையானது
என் வானம்...

Monday, April 18, 2011

பிரிவு


சாதலும்
சாதல் நிமித்தமும்..

ஊடற்பொழுது


இப்போதும் 
என் அறையில்
நீ உலவுகிறாய்..
புத்தகம் படிக்கிறாய்..
உறங்குகிறாய்..
குளித்துத்
தலை உலர்த்துகிறாய்..
என்னிடம் மட்டும்
பேசுவதில்லை..



Tuesday, April 5, 2011

முள்

இருள் போர்த்திய
நெருஞ்சிகளின் வழியில்..
நீங்காமல் நீள்கிறது
பயணம்...
பூர்த்தியற்ற வலிகள்
குழப்பங்கள்..
இடையில்
இன்னொரு முள்
உன் மௌனம்...