நீ
உதிர்த்துப் போன
தனிமையில்
உதிர்ந்தே போனது
என் இரவு..
துளிர்த்திருந்த
கனவுகளும்
தூக்கு மாட்டிக் கொண்டன..
Welcome to The Aura Of Love... Sensible love has nothing to do with this blog, as it shares its elements with humanity. This blog is meant to adore the beauty of Tamil free verse. Otherwise, if you are a bit of romanticizing in nature, this might feed your obsessions.
Monday, October 3, 2011
Tuesday, May 10, 2011
Friday, April 22, 2011
Wednesday, April 20, 2011
Monday, April 18, 2011
ஊடற்பொழுது
இப்போதும்
என் அறையில்
நீ உலவுகிறாய்..
புத்தகம் படிக்கிறாய்..
உறங்குகிறாய்..
குளித்துத்
தலை உலர்த்துகிறாய்..
என்னிடம் மட்டும்
பேசுவதில்லை..
Tuesday, April 5, 2011
முள்
இருள் போர்த்திய
நெருஞ்சிகளின் வழியில்..
நீங்காமல் நீள்கிறது
பயணம்...
பூர்த்தியற்ற வலிகள்
குழப்பங்கள்..
இடையில்
இன்னொரு முள்
உன் மௌனம்...
Monday, January 31, 2011
Friday, January 28, 2011
வெற்றிடம்
என் காதல்
ஒரு வெற்றிடம்.
அதை நிரப்புவதெல்லாம்
உன்
மெல்லிய புன்னகையும்..
உன்
மகத்தான காதலும்..
கடவுள் போல்
உன் மௌனமும்...!
ஒரு வெற்றிடம்.
அதை நிரப்புவதெல்லாம்
உன்
மெல்லிய புன்னகையும்..
உன்
மகத்தான காதலும்..
கடவுள் போல்
உன் மௌனமும்...!
Thursday, January 6, 2011
நெடுனள்ளிரவு
இறவாத இரவுகளின்
அடர்வினுள்
ஏகாந்தக் குமிழ்களில்
மிதந்து கொண்டிருக்கும்
கனவுகள் எதற்கும்
தெரியவில்லை..
நான் இன்னும்
உறங்கவில்லை என...
அடர்வினுள்
ஏகாந்தக் குமிழ்களில்
மிதந்து கொண்டிருக்கும்
கனவுகள் எதற்கும்
தெரியவில்லை..
நான் இன்னும்
உறங்கவில்லை என...
Subscribe to:
Posts (Atom)